Sunday, November 21, 2010

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ரிஸானாவின் கதி என்ன?


இலங்கையைச் சேர்ந்த ரிஸானா நபீக் என்னும் பெண் சவூதி அரேபியாவில் தான் பணிப்பெண்ணாக பணியாற்றிய வீட்டில் நான்கு மாத வயதுடைய சிசுவின் மரணத்துக்கு காரணமென குற்றஞ் சாட்டப்பட்டு ரிஸானாவுக்கு 2007 ஆம் ஆண்டு ஜுலை மாதம் சவூதி நீதிமன்றம் மரண தண்டனையைத் தீர்ப்பாக வழங்கியது. இக்காலப் பகுதியில் ஊடகங்களில் இச்செய்தி பரபரப்பாக பேசப்பட்டது யாவரும் அறிந்ததே.

தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து ரிஸானா மேன்முறையீடு செய்திருந்தார். இம்மேன்முறையீடு ரியாத்திலுள்ள நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு ரிஸானாவின் மரணதண்டனை மீளவும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. இம்மரண தண்டனையை சவூதி மன்னர் அங்கீகரிக்கும் பட்சத்தில் ரிஸானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விடும்.

பெண்களை நிர்வகிப்பவர்களாக ஆண்களை அல்லாஹ் படைத்துள்ளான். பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு பெற்றோருக்கு இருக்கும் நிலையில் தகப்பன் சம்பாதிப்பதை விட்டு விட்டு பிள்ளையை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும் ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். (அல்குர்ஆன் 4:34)

பெண்கள் மஹ்ரமான ஆண் துணையின்றி பயணம் மேற்கொள்வதை தடுக்கின்ற மார்க்கமாக இஸ்லாம் மார்க்கம் உள்ளது. இந்த நிலையில் பெண் பிள்ளைகளை அதுவும் போலியான வயதைக் காட்டி நாட்டின் சட்டத்தையும் மதிக்காமல் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு அனுப்பிய பெற்றோரை முதலில் கண்டிக்க வேண்டும்.

இதை ஒவ்வொரு பெற்றோரும் யோசிக்க வேண்டும். ஆண்களும் பெண்களை  வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு அனுப்புவதை நிறுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நாட்டில் பெண்களை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு அனுப்புவதை தடை செய்யும் சட்டத்தை அரசாங்கம் கொண்டு வர வேண்டும்.(அதிக அந்நிய செலாவணியைப் பெற்றுக் கொள்வதிலேயே அரசாங்கம் முன்னுரிமை காட்டுகிறது) அப்போது தான் பெண்களின் மானம் மரியாதை பாதுகாக்கப்படும். இதற்கு இஸ்லாம் மார்க்கம் தான் சரியான பாதுகாப்பு அரணை போட்டுள்ளது.

எந்த ஒரு பெண்ணும் மஹ்ரம் துணை இல்லாமல் ஒரு பரீத் –அதாவது 12 மைல்- தூரத்துக்கு பயணம் செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: இப்னு குஸைமா பைஹகீ அபூதாவூத் ஹாகிம்


இதன் அடிப்படையில் பெண்கள் 12 மைல் தொலைவு உள்ள தூரத்துக்கு தனியாகப் பயணம் செய்ய அனுமதி உள்ளது. அதற்கு மேல் தனியாகப் பயணம் செய்ய அனுமதி இல்லை
 
பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும், மானத்தை பாதுகாக்கும் அரண்களை கட்டுப்பாடுகளை அல்லாஹ் நமக்கு அருளியுள்ளான். இதனைக் கவனிக்கத் தவறுகின்ற பட்சத்தில் நாமே நம்மீது கைசேதத்தை ஏற்படுத்திக் கொள்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே, தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானனின் உடைமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான். (நூல்: புகாரி 2409)

ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்புகளை பற்றி விசாரிக்கப்படும் மறுமை நாளைப் பயந்துஇ அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்துடன்  அவரவர் பொறுப்புகளை ஒழுங்காக செய்தால் ஈருலக நன்மைகளை பெற்றுக் கொள்ளலாம். மார்க்கத்தின் வரம்புகளைஇ வரையறைகளை மீறும் போது தான் கஷ்டங்களை துன்பங்களை அனுபவிக்க வேண்டி ஏற்படும். இவற்றைக் கவனத்தில் கொண்டு நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும் என்பதையும் மனதிலிருத்தி எம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வோமாக.

Saturday, September 25, 2010

“டிசம்பர் 6“ பாபர் மஸ்ஜித் உண்மை வரலாறு!

பிரச்சினை உருவான விதம்

1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸலிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக் காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள்         வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது.

4
1வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலை களை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத் தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது.
‘இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மஸ்ஜித்’ என்ற புளுகு மூட்டையை சூதுவாது அறியாத இந்துக்கள் மனதில் அவிழ்த்துவிட்டு அவர்களில் பலர் அந்தப் பொய்யை நம்புகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
9
8
6‘இராமருக்காகக் கட்டப்பட்ட கோவில் ஒன்று அயோத்தியில் இருந்து அதை இடித்து விட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது’ என்ற சங்பரிவாரத்தின் வாதம் உண்மையாக இருந்தால் பாபர் மசூதிக்காக எந்த முஸ்லிமும் போராடமாட்டார். பிறருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிர மிப்புச் செய்து அதில் பள்ளிவாசல் கட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
பாபர் மசூதி பற்றி சங்பரிவாரத்தினரின் வாதங்கள் முற்றிலும் பொய்யாக இருப்பதால் தான் பாபர் மசூதிக்காக முஸலிம்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
10இராமர் என்று ஒருவர் வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சட்டர்ஜி, ஏ.கே. மஜும்தார், நேரு உள்ளிட்ட பல தலைவர்கள் கூறியுள்ளதன் அடிப்படையில் இராமர் கற்பனைப் பாத்திரம் என்று கூறி பிரச்சினையை நாம் திசை திருப்ப மாட்டோம்.
7V   ஏனெனில் அந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததா? அது பாபரால் இடிக் கப்பட்டதா? அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பதுதான் பிரச்சினையே தவிர இராமர் கற்பனைப் பாத்திரமா வரலாற்றுப் பாத்திரமா என்பது அல்ல.
இராமர் கற்பனைப் பாத்திரமாகவே இருந்தாலும் அவருக்காகக் கட்டப்பட்ட கோவிலை பாபர் இடித்திருந்தால் அது தவறு என்பதை எந்த முஸலிமும் மறுக்க மாட்டார்.
அயோத்தியில் ராமர் பிறந்தாரா?
அயோத்தியில், அதுவும் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற வாதம் எந்த அளவுக்குச் சரியானது என்பதைக் காண்போம்.
இராமரைப் பற்றி இந்துக்கள் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் சங்பரிவா ரத்தினரின் கூற்றுக்களின் அடிப்படையில் எடுக்கக் கூடாது. இந்து மதப் புராணங்களை மேற்கோள் காட்டியே முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் மனம் போக்கில் யாரேனும் இராமரைப் பற்றி முடிவு செய்தால் அது அவரது முடிவாகத்தான் இருக்குமே தவிர இந்து மதத்தின் முடிவாக இருக்க முடியாது.
இராமரைப் பற்றி முதன் முதலில் வால்மீகி என்பவர் சமஸ்கிருத மொழியில் இராமாயணத்தை எழுதினார். இராமரைப் பற்றி அதில் கூறப்பட்ட விஷயங்கள் தான் இராமரைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாகும்.
வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்ததைப் பற்றிக் கூறும்போது, ‘அவர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று கூறப் பட்டுள்ளது.
இந்துக்களின் கால அளவை முறையில் யுகம் என்பது காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு. அவை:
கிருத யுகம் 17,28,000 (பதினேழு இலட் சத்து இருபத்து எட்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது.
திரேதா யுகம் 12,96,000 (பன்னிரெண்டு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம்) ஆண்டுகள் கொண்டது.
துவாபர யுகம் 8,64,000 (எட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரம்) ஆண் டுகள் கொண்டது.
கலியுகம் 4,32,000 (நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது) என்பனவாகும்.
அதாவது கிருத யுகத்தில் பாதி அளவு கொண்டது திரேதா யுகம். திரேதா யுகத்தில் பாதி அளவு கொண்டது துவாபர யுகம். துவாபர யுகத்தில் பாதி அளவு கொண்டது கலியுகம்.
இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலியுகம். கலியுகம் கிறிஸ்து பிறப்பதற்கு 3102 வருடங்களுக்கு முன் துவங்குகிறது. இயேசுவுக்குப் பின் 2008 ஆண்டுகள் ஆகின்றன. இதன்படி கலியுகம் துவங்கி 5110 ஆண்டுகள் நடக்கிறது. இந்த யுகத்தில் இராமர் பிறக்கவில்லை.
கலியுகத்துக்கு முந்திய யுகம் தூவாபர யுகம். இந்த யுகத்திலும் இராமர் பிறக்க வில்லை.
இந்த யுகத்துக்கும் முந்திய யுகம்தான் திரேதா யுகம். இந்த யுகத்தின் கடைசி வருடத்தில் இராமர் பிறந்திருந்தார் என்று வைத்துக் கொண்டால் கூட 8,64,000 + 5,110 = 8,69,110 எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் இராமர் பிறந்தார் என்பது வால்மீகி இராமாயணத்தின் தீர்ப்பு.
இராமர் பிறந்த காலம் பற்றி வால்மீகி இராமாயணம் கூறுவது போலவே அவர் பிறந்த ஊர் பற்றி கூறும்போது, ‘இராமர் அயோத்தி என்னும் பட்டணத்தில் பிறந் தார்’ எனக் கூறுகிறது.
அப்படியானால் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அயோத்திப் பட்டணம் இருந்தி ருக்க வேண்டும்.
ஆனால் உ.பி.யில் உள்ள அயோத்தி எப்போது தோன்றியது என்று பல விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், மத்திய அரசாங்கத்தின் தொல் பொருள்துறை சார்பில் அயோத்தியை ஆய்வு செய்து 1976, 77ல் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் 52, 53 ஆகிய பக்கங்களில் ‘அயோத்தி என்ற ஊர் உண்டானதும், அதில் மக்கள் வசிக்கத் தொடங்கியதும் கி.மு. 700ல்தான் இருக்க முடியும்’ எனக் குறிப்பிடுகின்றார்.
அதாவது 2708 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று அவர்களின் அறிக்கை கூறுகிறது.
இதன் பின்னர், சி.பி.லால், கே.என். தீட்சித் ஆகிய வரலாற்று வல்லுனர்கள் 1979, 80ல் இதை மறு ஆய்வு செய்தனர். தொல்பொருள் துறையினரின் மேற்கொண்ட முடிவு சரியானதே என்று அவர்கள் கண்டுபிடித்தனர்.
அயோத்தியில் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராமர் பிறந்தார் என்று வால்மீகி கூறுகிறார். ஆனால் ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அந்தக் காலத்தில் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்த தில்லை என்பது தெளிவாகிறது.
இராமாயணத்தையும் மறுக்காமல், தொல்பொருள் அறிஞர்களின் கண்டுபிடிப் புகளையும் மறுக்காமல் ஒரு முடிவுக்கு வருவதாக இருந்தால் என்ன முடிவுக்கு இந்துக்கள் வர வேண்டும்?
இந்த அயோத்தியின் வயது 2708 ஆண்டுகளாக இருக்கலாம். ஆனால் ராமாயணத்தில் கூறப்பட்ட அயோத்தி இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அந்த அயோத்தி இருந்திருக்கலாம். ஒரு பெயரில் பல ஊர்கள் இருப்பது சாதாரண மானதுதான் என்ற முடிவுக்குத்தான் அவர்கள் வரவேண்டும். அப்போதுதான் நடைமுறை உண்மைக்கு முரணில்லாமலும், இராமாயணத்தை மறுக்காமலும் முடிவு எடுத்ததாக அமையும்.
‘இராமர் பிறந்தது இந்த அயோத்தி அல்ல; வேறு அயோத்திதான்’ என்பதற்கு இராமாயணத்திலேயே இன்னும் பல சான்றுகள் உள்ளன.
அயோத்தியைப் பற்றி பேசும் வால்மீகி இராமாயணம் சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது. சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜன் தூரத்தில் உள்ளது என்று கூறுகிறது. ஒன்றரை யோஜன் என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோ மீட்டர் ஆகும்.
ஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடினாலும், அது அயோத்திலேயே ஓடுகிறது. அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அது இல்லை.
அப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால்தான் இராமா யணம் கூறுவது மெய்யாகும்.
”இந்த அயோத்திதான் அந்த அயோத்தி” என்று கூறுவது இராமாயணத்தை மறுத்து இந்து மதத்தையே மறுப்பதாக ஆகிவிடும்.
அதுபோல் சரயூநதி கங்கை எனும் பெருநதியில் சங்கமம் ஆகிறது என்று வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது. ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி கங்கையில் சங்கமம் ஆகவில்லை. மாறாக ராப்தி எனும் நதியில் சங்கமமாகிறது. இதிலிருந்து தெரிய வருவது என்ன? இராமாயணம் குறிப்பிடுவது இந்த அயோத்தியையோ, இந்த சரயூ நதியையோ அல்ல என்பதுதான்.
மேலும் சரயூ நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வதாக வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிறது. ஆனால் உ.பி. யில் உள்ள சரயூ நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது.
அதை ஆய்வு செய்த ஷேர்சிங் என்ற ஆய்வாளர் ஒரு உண்மையைக் கண்ட றிந்து வெளிப்படுத்தியுள்ளார்.
நேபாளத்தில் ஒரு அயோத்தி உள்ளது. அதிலிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு நதி ஓடுகிறது. அது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. மேலும் அது கங்கையில் சங்கமம் ஆகிறது என்று அவர் கண்டுபிடித்துள்ளார்.
எனவே இராமர் பிறந்த அயோத்தி உ.பி.யில் உள்ள அயோத்தி என்று யாராவது நம்பினால் அவர்கள் இராமாயணத்தை மறுத்தவர்களாகின்றனர்.
இராமாயணத்தில் கூறப்படும் அடையாளங்களும், தன்மைகளும் எந்த அயோத்திக்குப் பொருந்துகிறதோ அந்த அயோத்திதான் இராமர் பிறந்த அயோத்தி என்று முடிவு செய்வதுதான் இந்துமதத்தின் ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்ட தாகும்.
அயோத்தியில் இராமர் கோவில் இருந்ததா?
‘பாபர் மசூதி 1528ல் கட்டப்பட்டது. மீர்பாகி என்ற பாபரின் தளபதி அங்கிருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் கோவிலைக் கட்டினார்! என்ற வாதத்திலாவது உண்மை உள்ளதா என்றால் அதிலும் உண்மை இல்லை.
இந்த இராமர் கோவிலை விக்கிரமா தித்த மன்னர் கட்டினார் என்று சங்பரிவா ரத்தினர் கூறுகின்றனர். விக்கிரமாதித்தன் என்பது சோழன், பாண்டியன் போன்ற பொதுப் பெயராகும். சந்திர குப்தர், சமுத்திர குப்தர் உள்ளிட்ட குப்த மன்னர்கள் தான் விக்கிரமாதித்தன் என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றனர்.
அவர்களில் இராமர் கோவிலைக் கட்டிய மன்னர் யார் என்பதைப் பற்றி பலவறாக முரண்பட்டுக் கூறுகிறார்கள். கோவிலைக் கட்டிய விக்கிரமாதித்தன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களின் கூற்று பொய் என்பதில் ஐயம் இல்லை.
குப்த மன்னர்கள் உ.பி.யில் சில பகுதி களை ஆட்சி செய்த காலம் கி.பி. 300 முதல் கி.பி. 1100 வரையாகும். இந்த எண்ணூறு ஆண்டுகளில் ஆட்சி செய்த குப்த மன்னர்களே விக்கிரமாதித்தன் எனப்படு கின்றனர்.
கி.பி. 300 முதல் 1100 வரை அயோத்தி என்று கூறப்படும் நகரில் மனித சஞ்சாரமே இருந்ததில்லை. இந்திய தொல் பொருள் இலாகாவின் தலைவர்
பி.பி. லால், 1975ல் சமர்ப்பித்த ஆய்வ றிக்கை ‘தி வீக்’ (25.02.90) எனும் ஆங்கில ஏட்டிலும் ‘சன்டே டைம்ஸ்’ (20.11.87) ஏட் டிலும் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் பலவிதமான ஆதாரங்களை எடுத்துக் காட்டி அயோத்தி எனப்படும் அந்தப் பகுதியில் குப்தர்கள் ஆட்சி செய்த 300 லி 1100 வரையிலான கால கட்டத்தில் எந்த மனிதனோ, கட்டடமோ, கோவிலோ, வேறு எதுவுமோ இருந்த தில்லை” என்று அடித்துக் கூறுகிறார்.
‘மனிதர்கள் வாழாத இடத்தில் குப்தர்கள் கோவில் கட்டினார்கள்’ என்று கூறுவது பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது. இல்லாத கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்பதை இந்து நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
இராமர் கடவுளாகக் கருதப்பட்டது எப்போது?
இராமருக்குக் கோவில் கட்டுவது என்றால் அவரை இந்துக்கள் கடவுளாகக் கருதத் தொடங்கிய பிறகுதான் கட்டுவார்கள். இராமரைக் கடவுள் என்று இப்போது இந்துக்கள் நம்பினாலும் ஆரம்பத்தில் இந்துக்கள் அவ்வாறு நம்பவில்லை. குறிப்பாக, கோவில் கட்டப்பட்டதாக சங்பரிவாரர் கூறும் 300, 1100 குப்தர் காலத்தில் இராமர் கடவுள்களில் ஒருவராகக் கருதப் படவில்லை.
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அமர சிம்ஹ என்பவர் ‘அமர கோஷா’ என்ற பெயரில் சமஸ்திருத கலைக் களைஞ்சியத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கடவுளாகக் கருதப்பட்டவர்கள் என்ற பட்டியல் உள்ளது. அந்தப் பட்டியலில் இராமர் இல்லை. அந்தக் காலகட்டத்தில் இந்துக்கள் இராமரைக் கடவுளின் அவதாரமாகக் கருதவில்லை என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது.
லட்சுமிதர் என்பவர் புனித யாத்திரைத் தலங்கள் என்ற பெயரில் 11 ஆம் நூற்றாண்டுவரை, அதாவது குப்தர்களின் கடைசிக் காலம்வரை இந்தியாவில் இருந்த புனிதத் தலங்களைப் பட்டியல் போட்டுள்ளார். அந்தப் பட்டியலில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.
குப்தர் ஆட்சியில் இராமர் கோவில் கட்டப்பட்டது உண்மை என்றால் அந்த ஆலயம் ஏன் புனித யாத்திரைத் தலங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை?
அதுபோல் எஸ்.எஸ். ஐயர் என்ற ஆய்வாளர், ‘இந்தியக் கோவில்கள், கட்ட டக்கலை, சரித்திரக் குறிப்புக்கள்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் பற்றி அவர் கூறவில்லை. விக்கிரமாதித்தன் கட்டிய கோவில்கள் என்ற தலைப்பில் ஐந்து கோவில்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.
ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராமச்சந்திர கத்ரி என்பவர் 1989 நவம்பர் 12 தேதியிட்ட ‘ரேடியன்ஸ்’ பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா உள்ளிட்ட பல ஆதாரங்களைக் காட்டி, கி.பி. 1100க்குப் பிறகுதான் இராமரைக் கடவுள் என்று கருதி வழிபடும் நிலை உருவானது எனக் கூறுகிறார்.
அதாவது கடைசி விக்ரமாதித்த மன்னர் காலம் வரை ராமர் என்பவர் இந்துக்களின் கடவுள்களின் அவதாரங்களில் ஒருவராக வணங்கப்படவில்லை.
கடவுளாகக் கருதப்படாதவருக்கு குப்தர்கள் கோவில் கட்டினார்கள் என்று மனசாட்சி உள்ள இந்துக்கள் நம்ப முடியுமா?
இன்னும் தெளிவாகச் சொல்வதானால், வால்மீகி எழுதிய இராமாயணம் சமஸ் கிருத மொழியில்தான் இருந்தது. சமஸ்கி ருதம் மக்களின் பேச்சு மொழியாக இருக்கவில்லை. பிராமனப் பண்டிதர்கள் மட்டுமே அறிந்த மொழியாகத்தான் இருந்தது. எனவேதான் இராமர், மக்களால் கடவுளாகக் கருதப்படவில்லை.
மக்கள் பேசுகின்ற இந்தி மொழியில் துளசிதாசர் என்பவர் இராமாயணத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார். இதன் பின்னர்தான் இராமாயணம் மக்கள் அறியும் காப்பியமாக ஆனது. துளசி தாசர் இந்தியில் ராமாயணம் வெளியிட்ட பின்பு தான் இராமர் கடவுள் அவதாரம் என்று மக்களால் கருதப்பட்டார்.
துளசி தாசர் காலம் என்ன? எந்தக் காலத்தில் இராமர் கோவில் இடிக்கப்பட்ட தாகக் கூறுகிறார்களோ, எந்தக் காலத்தில் பாபர் ஆட்சி புரிந்தாரோ, அதே காலத்தில் தான் துளசி தாசரும் வாழ்கிறார். அதுவும் அயோத்தியில் வாழ்கிறார். 1500 களில்தான் பாபர் ஆட்சி புரிகிறார். அந்த ஆட்சியின் கீழ்தான் துளசி தாசரும் வாழ்கிறார்.
இராமாயணம் இந்தி மொழியில் ஆக்கப்பட்டதே பாபர் காலத்தில்தான் என்பதும், பாபர் காலத்தில் இராமர் கடவுளாகக் கருதப்படவுமில்லை. இந்து மக்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கவும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
இராமாயணமே இந்தியில் மக்கள் மத்தியில் பரவாத காலத்தில் இராமர் எப்படி கடவுளாகக் கருதப்பட்டிருப்பார்? எப்படி அவருக்குக் கோவில் கட்டபட்டிருக்கும் என்பதை நியாயவுணர்வுள்ள இந்துக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இந்தியாவில் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் டாக்டர். ராதா கிருஷ்ணன். இவரது மகன் சர்வபள்ளி கோபால் இந்து பக்திமானும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளருமாவார்.
இவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் ”கி.பி. 1750க்கு முன்பு வரை இந்தியாவில் இராமருக்காக எந்தக் கோவி லும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளே” எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறார்.
200 ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை என்றால் 1528ல் இல்லாத இராமர்கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்று நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கோருகிறோம்.
உண்மை என்னவென்றால் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டியவர் இப்ரா ஹிம் லோடியாவார். இவர் 1524ல் பள்ளி வாசலுக்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் அப்பணியைத் தொடர வில்லை. இப்ராஹிம் லோடியைக் கொன்றுவிட்டு அப்பகுதியைக் கைப்பற் றிய பாபர், 1528ல் அந்த அடித்தளத்தின் மீது பாபர் பள்ளியைக் கட்டினார். எனவே பாபர் கோவிலை இடித்தார் என்று கூறு வது முழுப் பொய் என்பது இதன் மூல மும் தெளிவாகிறது.
பாபர் கோவிலை இடிப்பவரா?
இதுவரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் மட்டுமே அறிவுடைய மக்களுக்குப் போதுமானதாகும். ஆயினும், ஒரு வாதத்துக்காக அங்கே கோவில் இருந்தாலும் பாபர் அதை இடித்திருக்க மாட்டார்.
ஏனெனில், இதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத் தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள் ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.
கோவில்களுக்கு மானியம் வழங்கிய ஒருவர் எப்படி கோவிலை இடிப்பார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
மேலும் பாபர் ஆட்சி புரிந்தபோது முஸலிம்களின் சதவிகிதம் இப்போதுள்ள தைவிட பன்மடங்கு குறைவாகவே இருந்திருக்கும். பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு இல்லாமல் இருந்தால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். பெரும்பான்மை மக்களின் வழி பாட்டுத் தலத்தை பாபர் இடித்திருந்தால் அப்போதே மாபெரும் மக்கள் புரட்சி ஏற்பட்டு பாபர் விரட்டியடிக்கப்பட்டிருப்பார். பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் உள்ள எந்த மனிதனும் இதுபோன்ற காரியங்களைச் செய்யவே மாட்டார்.
பாபர், அவரது மகன் ஹிமாயூன், அவரது மகன் அக்பர் என்று வாழையடி வாழையாக எவ்விதப் புரட்சியும் வெடிக்காமல் ஆட்சி நீடித்தது என்றால் இந்துக்கள் வெறுப்படையும்படி அவரது ஆட்சி அமையவில்லை என்பது தெளிவாகவில்லையா?
பாபர் தமது கடைசிக் காலத்தில் தனது மகன் ஹிமாயூனுக்கு பாரசீக மொழியில் ஓர் உயில் எழுதினார். அந்த உயில் மத்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் டெலலியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்த உயிலில்,
”மகனே! இந்துக்கள் பெரும்பான்மை யாகவுள்ள ஒரு நாட்டை நீ ஆளப் போகிறாய். இந்துக்கள் பசுவைத் தெய்வமாக மதிக்கின்றனர். எனவே எக்காரணம் கொண்டும் பசுவின் மாமிசத்தை உண்ணாதே! அதனால் இந்துக்கள் உன்னை வெறுத்து விடுவார்கள்” என்று மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
இந்துக்கள் வெறுத்து விடக்கூடாது என்பதற்காக பசுவின் மாமிசத்தையே தவிர்த்துக் கொள்ளச் சொன்ன பாபர், கோவிலை இடித்திருக்க முடியும் என்று சிந்தனையுள்ள யாராவது நம்ப முடியுமா?
பாபர் காலத்தில் அவரது முதல் எதிரியாக இருந்தவர் குருநானக். இவர்தான் சீக்கிய மதத்தின் நிறுவனர். இவர் பாபரை கடுமையாக எதிர்த்து வந்தார். குறிப்பாக பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்றவற்றைத்தான் அவர் குறிப்பிடுகிறார். பாபர் கோவிலை இடித்திருந்தால் அதை குருநானக் கட்டாயம் குறிப்பிடாமல் இருக்க மாட்டார். அது மட்டுமின்றி குருநானக் அயோத்திக்கு வந்து பாபர் மசூதியைப் பார்வையிட்டு ரசித்திருக்கிறார் என்று அவரது வரலாறு கூறுகிறது.
கோவிலை இடித்து பாபர் பள்ளிவாசல் கட்டியிருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த அவருக்குத்தான் அது நன்றாகத் தெரியும். கோவிலை இடித்துக் கட்டிய பள்ளிவாசலை அவர் ஒருக்காலும் ரசித்திருக்க மாட்டார்.
பாபர் கொடுங்கோலர் என்பதால் பயந்து கொண்டு விமர்சனம் செய்யாமல் மக்கள் இருந்திருக்கலாம் என்று பொய்யாகக் கற்பனை செய்து சிலர் கூறுகின்றனர்.
பாபர் கொடுங்கோலராகவோ, இந்துக்களால் வெறுக்கப்பட்டவராக இருக்கவில்லை என்பதே உண்மை. ஒரு வாதத்துக்காக பாபர் கொடுங்கோலர் என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதம் சரியானது அல்ல.
பாபருக்குப் பின் அவரது மகன் ஹீமாயூன் ஆட்சி செய்கிறார். பாபர் இறந்து 25 ஆண்டுகளில் அவரது பேரன் அக்பர் ஆட்சிக்கு வருகிறார். இவர் இஸ்லாத்தை விட்டு விலகி, தீனே இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கினார். சங்பரிவாரத்தினர் பாராட்டும் அளவுக்கு இந்துச் சார்புடைய மன்னராக இருந்தார் அக்பர்.
கோவிலை பாபர் இடித்திருந்தால் அதை நேரில் பார்த்த பலரும் அக்பர் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள். அக்பருக்கு அவர்கள் அஞ்சத் தேவையில்லை. ”உங்கள் தாத்தா இடித்த கோவிலைக் கட்டித் தாருங்கள்” என்று ஒரு வார்த்தை சொன்னால் அப்போதே அக்பர் அதைச் செய்திருப்பார். இடித்திருந்தால்தானே கேட்டிருப்பர்கள்? அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லையே.
அதுதான் போகட்டும்! முஸலிம்களின் ஆட்சி முடிவுக்கு வந்து வெள்ளையர்கள் ஆட்சி நடத்தினார்களே! அந்தக் காலம் முதல் நாடு விடுதலை அடைந்த 1948 வரை இதுபற்றி எந்த வழக்கோ, பிரச்சினையோ இருந்ததா என்றால் அறவே இல்லை.
வெள்ளையர்களின் 200 ஆண்டு கால ஆட்சியிலும்
”கோவிலை இடித்துவிட்டார்கள்; அதை எங்களிடம் தாருங்கள்” என்று வழக்கு ஏதும் பதிவாகவில்லை. ஒர் காலகட்டத்தில் இந்து முஸலிம் பகைமை மிகவும் உச்சத்தில் இருந்தது. அந்தக் காலத்தில்கூட இதுபோன்ற பிரச்சினை எதுவுமில்லை.
1949 டிசம்பர் 23ல் சிலைகளைப் பள்ளி வாசலில் வைத்து பிரச்சினையை முதன் முதலாகத் துவங்கும்வரை இராமர் கோவில் என்ற எந்த விவகாரமும் இருக் கவில்லை.
இன்னும் சொல்வதாக இருந்தால் அயோத்தியில் இராமர் பிறந்த இடம் என்ற பெயரில் 30 கோவில்கள் இன்றளவும் உள்ளன. இராமர் பிறந்த இடம் என்று பல இடங்களைக் குறிப்பிட்ட இந்துக்கள் பாபர் மசூதியையும் அதில் ஒன்றாகக் குறிப்பிடவில்லை.
1949ல் சங்பரிவாரம் புளுகு முட்டையை அவிழ்த்து விடும்வரை இதுதான் நிலைமை.
எனவே மக்களின் வெறியைக் கிளறி விட்டு அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தப் பொய்யைப் பரப்பினார்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வெள்ளை மனம் படைத்த இந்து மக்களை ஏமாற்றி வளர்ந்து ஆட்சியையும் பிடித்தார்கள்.
இந்துச் சமுதாய மக்களே! இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம். பொய்களைப் பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களைப் புறக்கணிப்போம்.

Thursday, September 23, 2010

Lakbima News -- Wahhabist terriorist traning in Sri Lanka? THE ISSUES

Wahhabist terriorist traning in Sri Lanka? THE ISSUES
By Ranga Jayasuriya
Last week, we cautioned that unregistered mosques of a Wahhabist Islamic sect would become a hotbed for propagating religious extremism.
We reported quoting a Muslim community leader that out of 200 mosques which had recently been opened by Tawhid Jamath, which follows an austere brand of Islam, only 35 had been registered with relevant the authorities.
Our report came in the wake of Indian media reports which alleged that a Laskhar- e- Taiba terrorist arrested by Indian police over a bomb attack in Pune had confessed that he received his terror training in Colombo. However, Defence Secretary Gotabaya Rajapaksa, in a statement posted on the defence ministry website, denied that extremist groups operating in Pakistan had received training on Sri Lankan soil.
Gotabaya Rajapaksa, stressed that Sri Lanka was free of terrorists and there was no ground for terrorists to receive training on Sri Lankan soil.
But, if anything to go by, the rise and spread of Wahhabism, the austere brand of Islamic teaching which follows a literal interpretation of the Quran, and is the core ideological force of al Qaeda led Salafi Jihadi revival, is a cause for concern.
A mainstream Muslim preacher in Colombo, who requested anonymity, citing fears of reprisals by Tawhid followers, says the Tawhid sect has got its followers in key positions in government ministries, bought air times in the Sri Lanka Broadcasting Corporation and revised school text books to give a Wahhabi outlook.
He says the Tawhid sect is generously funded by Saudi Arabia, of which Wahhabism is the state religion.
A number of charity organizations function as front organizations for Tawhid Jamath.
Among them are International Islamic Religious Organization (IIRO), Islamic Religious Organization (IRO), Al Muslimath, and ACTG etc, which maintain close links with Tamil Nadu Tawhid Jamath (TNTJ) founded by leading Wahhabi preacher P. Jainul Abideen (PJ).
He admits that these groups help the poor, but warns that they have used charity work to propagate religious extremism.
“They helped victims of tsunami in the East, then subtly preached them their version of Islam”
“People were naturally obliged to listen to them, because they had already been assisted by Wahhabists in their hour of need. Wahhabists exploited that weak spot,” he says.
The spread of Wahhabism in the East, most notably in the predominantly Muslim town of Kattankudy is attributed to aggressive proselytizing by the Tawhid sect, backed by generous financial support to new converts.
The flow of money to the Wahhabist sect from the Middle East should be monitored, he recommends.
He says Petro dollars have been used to buy over the key officials in government ministries. “These officials help Wahhabists to operate and propagate with ease,” he says.
Even the religious text book committee of the department of education has been infiltrated by Tawhid followers, he alleged, adding that school text books have been revised to provide a Wahhabi outlook of Islam.
“By this pace, fundamentalist indoctrination would start right there at schools,” he alleged.
Another community leader Riyaz Sally, Chairman of Islamic Solidarity Fund alleges that some private Muslim international schools propagate Wahabbism to students.
“When children come home, brainwashed by ‘incorrect’ religious teaching, they begin to question moderate faith,” he says.
Mainstream Sri Lankan Muslims follow Islamic traditions infused with mystical Sufism. Shrines, where Islamic holy men were buried had been part and parcel of most Sufi mosques, many of which are centuries- old.
Wahhabism, derived from the teachings of Muhammad ibn Abd-al-Wahhab, and eighteenth century religious zealot, after whom the movement is named, decries shrines as un-Islamic.
“When children, who are taught Wahhabism in schools come home and see their parents paying homage to a saint enshrined in a tomb, they then say parents are not Muslims,” says Sally.
“I know some families have split because of Wahhabist indoctrination,” he says.
Tawhid followers who, through subtle mechanizations, took control of the trustee committees of centuries-old Sufi mosques are infringing on Sufi practices.
“For instance, a Tawhid group took control of the trustee board of a mosque in Kollupitiya and shut down the centuries old shrine which devotees visited daily,” he says.The dispute ended only after the Court ordered the shrine to be open.
Sally alleges that the Tawhid sect is using air time in SLBC to propagate Wahhabism.
“They have bought two hours of air time from 12 noon to 2 pm of the SLBC Muslim Service, and through air waves, are often challenging practices of mainstream Muslims,” he said.
He says he complained to the chairman of the SLBC, but his protest was in vain.
“This program is radicalizing housewives,” he alleged.
Saudi Arabia is criticized by international groups, including Freedom House for exporting its ‘hate ideology’.
Freedom House in an earlier report said that Wahhabi publications in a number of mosques in the United States were preaching that Muslims should not only “always oppose” infidels “in every way”, but “hate them for their religion ... for Allah’s sake”, that democracy “is responsible for all the horrible wars of the 20th century”, and that Shia and certain other non-Wahhabi Muslims were infidels.
Saudi Arabia had spent 87 billion US Dollars to propagate Wahhabism abroad during last two decades according to a report of the US Senate Committee on Judiciary, and Subcommittee on Terrorism, Technology and Homeland Security in 2003.
The Islamic Religious leader, quoted earlier in this report alleged that handsome Saudi funding was behind the mushrooming of Wahhabi mosques.
Though mosques should be registered with the Waqf board, the majority of Tawhid mosques disregard this requirement.
“The Tawhid sect purchases houses at exorbitant prices and turns them into Madrasas. They indoctrinate poor local youth in Wahabbism in these places.”
He says Wahabbism in the East has taken a violent turn, expressing fears that Jihadi groups in the area are possessing firearms. Last year, several Muslim groups handed over weapons responding to a government announcement.
He alleges the Jamiyathul Ulema, the leading association of Islamic theologians in the island, is turning a blind eye to the rise of extremism.
“In 2009, after media reported about Jihadi groups in the East, the Jamiyathul Ulema issued a media statement denying the existence of such groups. But, what do they say now after an illegal radio station operated by the Tawhid sect in Beruwala was seized by the police?” he asks.
Two months back, police raided an unauthorized radio station operated by Tawhid followers in Beruwela and seized equipment worth 10 million rupees.
“A decade back, our mosques were places of peace; we went there in peace, prayed in peace and came out with peace of mind,” he says.
“This new sect has caused quite a lot of disharmony among Muslims.”
“The government should act now, before it is too late. The flow of funds from the Middle East should be monitored. And teaching in these madrasas should be regulated and monitored,” he says, adding :
“Fundamentalist threat is real.”

Tuesday, September 21, 2010

இலங்கை ஆங்கில நாளேட்டின் அவதூறு செய்தியும் அதற்கு SLTJ யின் பதிலும்!

கடந்த 19,09,2010 அன்று வெளியிடப்பட்ட லக்பிம ஆங்கில நாளேட்டின் 6ம் பக்கத்தில் Wahhabist terriorist traing in srilanka? THE ISSUES என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிடப் பட்டது.அந்தக் கட்டுரை முழுவதும் இலங்கையில் தீவிரவாதிகள் இருப்பதாகவும் அவர்கள் பயிற்சிகள் மூலம் தங்கள் இயக்கத்தை வளர்ப்பதாகவும் அபாண்டமான ஒரு பொய் கதை புனையப் பட்டிருந்தது.
லக்பிம செய்தியின் உண்மைத் தன்மை என்ன?
இலங்கையில் தவ்ஹீத் பிரச்சாரம் செய்யும் அமைப்புக்கள் அனைத்தும் தீவிரவாத இயக்கங்களின் தொடர்புடன் செயல்படுவதாகவும் அவ்வமைப்புகள் மூலம் கிடைக்கும் நிதியினால் இங்கு சமுதாய சேவைகள் செய்வதைப் போல் காட்டிக்கொள்வதாகவும் லக்பிம செய்தி வெளியிட்டுள்ளது.
உண்மையில் இலங்கையில் இருக்கும் தவ்ஹீத் அமைப்புகள் தீவிரவாதத்துடன் தொடர்பு வைத்துள்ளதா? அப்படியிருந்தால் அதற்குறிய ஆதாரம் என்ன? என்பவற்றையெல்லாம் லக்பிம வெளியிடுமா?
சவூதியிலிருந்து பணம் எடுத்து பள்ளி கட்டுதல்,கிணறு கட்டுதல் போன்ற வேலைகளை செய்யும் சில அமைப்புகளின் பெயர்களையும் குறிப்பிட்டு அந்த அமைப்புகள் எல்லாம் லக்ஷர் ஏ தய்யிபா மற்றும் அல்உம்மா போன்ற தீவிரவாத அமைப்புடன் இணைந்து இலங்கையில் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தீவிரவாத இயக்கமா?
லக்பிம ஆங்கில நாளேட்டின் மேற்குறிப்பிட்ட செய்தியில் தமிழகத்தில் மார்க்க மற்றும் சமுதாய பணியில் ஈடுபட்டு வரும் மபெரும் மக்கள் பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை தீவிரவாத இயக்கமாக குறிப்பிட்டுள்ளது.
கடந்த 25 வருடகாலமாக தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடந்த 2006ம் ஆண்டு 10லட்சம் மக்களை கூட்டி மபெரும் அரசியில் மாநாட்டை கும்பகோணத்தில் நடத்திக் காட்டியது.
அது போல் கடந்த 2008ம் ஆண்டு தஞ்சையில் சுமார் பத்து லட்சம் மக்களை கூட்டி மாபெரும் மாநாட்டை இந்த அமைப்பு நடத்தியதின் மூலம் அரசாங்கத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது மட்டுமல்லாமல் தற்போது தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசு அமைவதற்கு ஒட்டுமொத்த தமிழக முஸ்லீம்களின் வாக்குகளையும் பெற்றுக் கொடுத்தது இந்த அமைப்பே. அல்ஹம்துலில்லாஹ்!
இருதியாக கடந்து ஜுலை 4ம் தேதி அன்று இறைவனது கிருபையால் சுமார் 15 லட்சம் மக்களை ஒன்று கூட்டி இந்திய முஸ்லீம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு மாபெரும் அரசியல் மாநாட்டையும் நடத்திக்காட்டியது.
இப்படி மக்கள் பேரியக்கமாக திகழும் ஒரு இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக காட்டி அவர்களுடன் இலங்கையில் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகள் இணைந்து தீவிரவாத பயிற்சி மேற்கொள்வதாக கூறியிருப்பது ஒரு இயக்கத்தின் நற்பெயரைக் கெடுக்கும் மாபெரும் குற்றமாகும்.
TNTJ வின் நிறுவுனர் பி.ஜைனுலாப்தீன் என்பவர் யார்?
தமிழுலகு அறிந்த பிரபல இஸ்லாமிய அறிஞரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நிறுவுனருமான சகோதரர் பி.ஜே அவர்களை லக்பிம நாளேடு ஒரு தீவிரவாதியாக சித்தரித்து அவர்தான் இங்கு தீவிரவாத பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு தலைவராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
பி.ஜே தீவிரவாதியா?
கடந்த 25 வருடங்களாக இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்துவதின் மூலம் தீவிரவாதிகளையும் தீவிரவாதத்தையும் கடுமையாக எதிர்த்துவருகிறார்.
1980களிலிருந்து தமிழகத்தில் விடுதலைப் புலிகளை எதிர்து வந்த ஒரே தலைவர் இவர்தான்.
இலங்கையில் நடந்த இருதி யுத்தத்தின் போது சிவாஜிலிங்கம் எம்.பி.இந்தியாவிற்கு சென்று போரில் விடுதலைப் புலிகளுக்கு ஆதவு தரும்படி கேட்டதற்கு ஒருக்காலும் விடுதலைப் புலிகளை ஆதரிக்க முடியாது என்று தெளிவாக அறிவித்தவர் பி.ஜெ
தமிழக முன்னால் முதல்வர் ஜயலலிதா முதல் இன்னால் முதல்வர் கருணாநிதி வரை பல முறை முஸ்லீம்கள் விஷயமாக பல சந்திப்புகளை மேற்கொண்டுள்ளார்.
கடந்த ஜுலை 4ம் தேதி டி.என்.டி.ஜெ நடத்திய மாநாட்டின் பின் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களை டெல்லிக்கு அழைத்து பேசியதும் விஷேசமாக குறிப்பிடத்தக்கது.
இருதியாக கடந்த நோன்புப் பெருநாள் அன்றும் தீவிரவாதத்தை எதிர்த்துத் தான் பகிரங்க பிரச்சாரம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லக்பிம பத்திரிகை ஆசிரியரே கவணத்திற்கு.
உங்கள் நாளேடு வெளியிடும் செய்திகள் அனைத்தையும் உண்மைத் தன்மையை அறியாமல் தாங்கள் வெளியிடுவதை நிருத்திக் கொள்ளுங்கள்.
பி.ஜைனுலாப்தீன் அவர்கள் தீவிரவாதி என்றால் தீவிரவாதி பிரதமருடன் பகிரங்க சந்திப்பை மேற்கொள்ள முடியுமா?
டி.என்.டி.ஜெ தீவிரவாத இயக்கமெனில் தீவிரவாத இயக்கத்திடமா தி.மு.க அரசு தேர்தலில் ஆதரவு கேட்டது?
கலைஞர் கருணாநிதிக்கும் பி.ஜெக்கும் இடையில் பல முறை சந்திப்புகள் நிகழ்ந்துள்ளது அப்படியெனில் கருணாநிதியும் தீவிரவாதியா?
மன்மோகன்சிங்குடன் பி.ஜே பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்தியப் பிரதமரையும் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர் என்று லக்பிம் செய்தி வெளியிடுமா?
அத்துடன் தவ்ஹீத் இயக்கங்களை தீவிரவாத இயக்கங்களாக சித்தரித்ததற்காகவும் தமிழக முஸ்லீம் பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தையும் அதன் நிறுவுனதையும் தீவிரவாதிகளாக பொய் குற்றம் சாட்டியதற்காகவும் பகிரங்க மண்ணிப்பு கேட்க வேண்டும்.
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் ஆகிய நாம் இங்கு பல பணிகளை செய்து வருவதும் தீவிரவாதத்தை எதிர்த்துக் குரல் கொடுப்பதும் தாங்கள் அறியாத ஒன்றல்ல.
சவூதியில் பாதிக்கப்பட்ட இலங்கைப் பெண் ஆரியவதிக்கு எஸ்.எல்.டி.ஜெ சார்பாக 75000ம் ரூபா நிதியுதவி அளிக்கப் பட்டதும் இந்தச் செய்தி லங்காதீப தினகரன் போன்ற பத்திரிக்கைகளிலும் ஹிரு எப்.எம்.போன்ற வானொலி சேவைகளிலும் அது ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
அது போல் லேடி ரிஜ்வே மறுத்துவமனைக்கு எஸ்.எல்.டி.ஜெ சார்பாக பல முறை மருத்துவ உபகரண உதவி மேற்கொள்ளப் பட்டதும் அவை பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டதும்
குறிப்பிடத்தக்கதாகும்.

Monday, September 20, 2010

Comodo சூப்பரான இலவச Anit Virus மென்பொருள்

கம்யூட்டர் வைத்திருப்பவர்களுக்கு பெரும் பிரச்சானையாக இருப்பது இந்த வைரஸ் தொல்லை தான். இதனால் எதிர்பாராமல் நமது முக்கிய மான வேலைகள் பாதிக்கப்பட்டு விடும். சில நேரங்களில் இதை சரி செய்ய மணிக்கணக்கில் போராட வேண்டியிருக்கும்.
இணையதள பயன்பாடு உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனை அடிக்கடி ஏற்படும். இதை சமாளித்து சரி செய்வதற்குதான் ஆன்டி வைரஸ் (Anti Virus) மென்பொருட்கள் உள்ளன.
பெரும்பாலான ஆன்டி வைரஸ் (Anti Virus) மென்பொருள் இலவசமாக கிடைப்பதில்லை அவ்வாறு இலவசமாக கிடைக்கும் அவேரா (avera) ,ஏவிஜி (AVG) , மைக்ரோசாஃப்ட் டிஃபன்டர் (Windows Defender) , மைக்ரோ சாஃப்ட் செகுரிட்டி (Microsoft Security Essentials ) , பாண்டா க்ளவுட் (Panda Cloud )போன்ற ஆன்டிவைரஸ் மென்பொருட்கள் விலைக்கு வாங்கும் ஆன்டிவைரஸ் மென்பொருள் போன்று செயல்படுவதில்லை!
தற்பொது கொமொடொ (Comodo) என்ற நிறுவனம் இலவசமாக அன்டிவைரஸ் மென்பொருளை வெளியிட்டுள்ளது. நாம் பரிசோதித்ததில் இது விலை கொடுத்து வாங்கும் மென்பொருளை விட சிறந்த முறையில் வேலை செய்கின்றது. மேலும் Defense+ போன்ற இன்னும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் இதில் உள்ளன.
இந்த ஆன்டி வைரஸ் மென்பொருடன் ஃயர்வாலும் (Firewall) இலவசமாக கிடைக்கின்றது. இது இன்டர்நெட் மூலம் நமது தகவல்கள் திருடப்படாமல் பாதுக்காக்கவும் இணைதயளம் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படாமலும் நமது கணிணியை பாதுகாத்துக் கொள்ளும்.
இப்போதே பதிவிறக்கும் செய்து உங்கள் கணிணியை வைரஸ்களிடமிருந்து காத்துக் கொண்டு நிம்மதியாக பணியாற்றுங்கள்!.
பதிவிறக்கம் செய்து நிறுவிய பிறகு வைரஸ் ஸ்கேனரை படத்தில் உள்ளது போன்று On Access மோடிற்கு  மாற்றிக் கொள்ளவும். அப்பொழுதான் மென்பொருள் சிறப்பாக செயல்படும்!